search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாச்சியார் கோவில்"

    நாச்சியார் கோவில் என்ற தலத்தில் ஸ்ரீவஞ்சுளவல்லி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவிலில் கருடசேவை மிகவும் சிறப்பானது.
    கும்பகோணத்திற்கு அருகில் ஒன்பது கி.மீ. தொலைவில் உள்ள நாச்சியார் கோவில் என்ற தலத்தில் ஸ்ரீவஞ்சுளவல்லி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவில் கொண்டுள்ளார். இங்கு கம்பீரமாக கல்கருடன் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இப்படி கருடாழ்வாருக்கு தனி சன்னதி நாச்சியார் கோவிலில் மட்டுமே உள்ளது.

    இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் வஞ்சுளவல்லி நாச்சியாருக்கும் கருடன் திருக்கல்யாணம் செய்து வைத்தார் என்பது தல வரலாறு. அதற்காகவே பெருமாள் தனக்குச் சமமாக கருடனுக்கு தனியாக சன்னிதானம் அமையச் செய்து கருடாழ்வாராக பெருமைப்படுத்தியுள்ளார். பட்சிராஜன் என்ற பெயரோடு இங்குள்ள கல்கருடன் ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக காட்சி கொடுக்கிறார். மற்ற கருடனுக்கு இல்லாத ஒன்பது நாமங்களுடன் காட்சி கொடுக்கிறார்.

    இவர் பெரிய வரப்ரசாதி. ஏழு வாரங்கள் தொடர்ந்து இவரை வேண்டிக் கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் நினைத்த காரியம் நடக்கும். வியாழக்கிழமை தோறும் அமுதக் கலசம் என்ற பிரத்யேக நைவேத்யம் செய்யப்படுகிறது. பயத்தம் பருப்புடன் வெல்லம், ஏலக்காய் கலந்து செய்யப்படும் இனிப்பு நைவேத்யம் அது.

    இங்கு கருடசேவை மிகவும் சிறப்பானது. ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திர நாளில் கல் கருடனுக்கு சிறப்பாக விழா நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவக்காலத்தில் நான்காம் நாளன்று கல்கருடன் வீதி உலாவருகிறார்.

    பங்குனி மாதத்தில் நடை பெறும் பெருவிழாவில் சன்னதியிலிருந்து கருடனை நாலுபேர் பாதம் தாங்கி தூக்கி வருவார்கள். படிக்கட்டுகளிலிருந்து தூக்கி வரப்படும் கருடாழ் வாரை நீண்ட உருட்டு மரங்களில் கம்பி வளையத்திற்குள் செருகப்பட்டு பதினாறுபேர் சுமந்து வருவார்கள். இப்படி 32, பிறகு 64 பேர் கருடனைச் சுமந்து வருவார்கள். கோயிலுக்குத் திரும்பும்பொழுது இதே வரிசையில் சுமப்பவர்கள் குறைந்து கடைசியாக நான்குபேர் சுமந்து சன்னதியை அடைவார்கள்.

    விழாக் காலங்களில கல்கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகு போன்ற வாசனை திரவியங்களை அபிஷேகம் செய்கிறார்கள். இங்கு வெகுகாலம் இருந்த இரண்டு கருடப் பறவைகள் ஒரே நேரத்தில் உயிர்துறந்து முக்தி அடைந்தன. இவற்றுக்கு அதிஷ்டானம் ஒன்று அமைத்து வழிபடுகின்றனர்.
    பூதங்குடியில் உள்ள தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி, கடந்த 28-ந்தேதி அனுக்ஞை, வாஸ்து யாகம், கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

    இதை தொடர்ந்து 29-ந்தேதி காலை முதல் கால யாகசாலை பூஜையும், மாலையில் 2-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், பூர்ணாகுதி, திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணிக்கு திவார பூஜை, சதுஸ்தான அர்ச்சனம், பூர்ணாகுதி, சாற்றுமுறை நடைபெற்றது.

    நேற்று காலை 8.30 மணிக்கு விஸ்வரூபம், பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் 9 மணிக்கு மேல் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் மேள தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    இதையடுத்து கோவில் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, 9.30 மணிக்கு அங்கிருந்த கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    இதை தொடர்ந்து பரிவார தெய்வமான சுதர்சனர், யோக நரசிம்மர், அய்யப்பன், ராமபாதம், நவகிரகங்கள் மற்றும் நாக கண்ணி, தும்பிகை ஆழ்வார், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. யாகசாலை பூஜையை ஆச்சாரியார் பாபு தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் நடத்தினர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற இருக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மறைந்த பி.டி. ஜெயராமன் குடும்பத்தை சேர்ந்த டாக்டர் மோகன், என்ஜினீயர் மனோகரன், கலையரசன் ஆகியோர் தலைமையில் ராசகண்ணு, ஆத்மநாபான், சுந்தரவதனம், பாஸ்கரன் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் கோவில் சிற்ப வடிவமைப்பு மற்றும் சிற்பகலை ஏற்பாடுகளை அரங்கப்பன் செய்திருந்தார்.

    விழாவில் அருண்மொழி தேவன் எம்.பி., பாண்டியன் எம்.எல்.ஏ., ஜோதி பிரகாஷ், விநாயகம், ஜெயசீலன், சேத்தியாத்தோப்பு வியாபாரி சங்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, மணிமாறன், மகாலிங்கம், ஆனந்தபாபு, குஞ்சிதபாதம், கலைவாணன், மணிகண்டன், நன்மாறன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர், போலீஸ் நண்பர்கள் குழுவினர், பி.டி. ஜெயராமன் ஐ.டி.ஐ. மாணவர்கள், ஆர்.கே. செக்யூரிட்டி சர்வீசை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை ( ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற தீப்பாய்ந்த நாச்சியார் கோவில். இந்த கோவில் திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில், நாளை(ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, கணபதி ஹோமத்துட விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்று, பூர்ணா குதி நடந்தது. பின்னர் மாலையில் 2-ம் கால யாகசாலை பூஜை நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், பூர்ணாகுதி, திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு திவார பூஜை, சதுஸ்தான அர்ச்சனம், பூர்ணாகுதி, சாற்று முறை நடக்கிறது.

    நாளை காலை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு விஸ்வரூபம், பூர்ணாகுதி நடந்து, காலை 9 மணிக்கு மேல் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் கோபுரத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. தொடர்ந்து கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஜெயராமன் குடும்பத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். 
    ×